விழுப்புரம் || கல்குவாரி குட்டையில் குளித்து கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


கல்குவாரி குட்டையில் குளீத்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் பெருமுக்கல் கிராமத்தில் வசித்து வருபவர் கிருபா. இவரது பிள்ளைகள் பள்ளி விடுமுறை காரணமாக பாட்டி புஷ்பாவிற்கு வந்துள்ளனர். அப்பொழுது அங்குள்ள செயல்படாத கல்குவாரி குட்டையில் பாட்டியுடன் சேர்ந்து சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர்.

குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி புஷ்பா (60) வினோதினி (16) ஷாலினி (14) கிருஷ்ணன் (8) உள்ளிட்டோர் பரிதாபமாக பலியானர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர்.விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 person in family drowns In to water


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->