5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..மீனவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை! - Seithipunal
Seithipunal


5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீனவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுச்சேரி புதுக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் முனியப்பன்.58 வயதான இவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது, இதையடுத்தது மீனவர் முனியப்பனை கிருமாம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. புதுச்சேரியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசு சார்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.கடைசியாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.அதில் குற்றம் சாட்டப்பட்ட மீனவருக்கு 5 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.26 ஆயிரம் அபராதம் விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க புதுச்சேரி அரசுக்கு நீதிபதி சுமதி பரிந்துரை 
வழங்கினார்.இந்த வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீனவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A 5 year old girl was sexually assaulted Fisherman sentenced to 5 years in prison


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->