இன்று வெடிகுண்டு வெடிக்கும்!...தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் ஈரோட்டில் பரபரப்பு!..... - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம், மூலப்பாளையம் அருகே இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில், சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களில்  இப்பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்று அது வெடிக்கும் என்றும் மர்ம நபர்கள் இமெயில் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பள்ளி நிர்வாகம் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை வீட்டிற்கு திருப்பி அனுப்பிய நிலையில், பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த  போலீசார், பள்ளியின் பாதைகளையும் தடுப்புகள் மூலம் அடைத்து பள்ளியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், ஏடிஎஸ்பி விவேகானந்தன் தலைமையிலான காவல்துறையினர் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த வெள்ளிகிழமை  ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த இ-மெயில்அவை புரளி என்பது தெரியவந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A bomb will explode today There is a commotion in Erode due to a bomb threat at a private school


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->