ஆத்தூர் அருகே பரபரப்பு.! சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இருந்து சேலம் நோக்கி பார்சல் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்பக்கம் தீப்பிடித்து உள்ளது.

இதனை அறிந்த லாரி ஓட்டுநர் உடனடியாக லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு, இறங்கி ஓடியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் லாரியில் கொண்டு வந்த பொருட்கள் சேதமின்றி மீட்கப்பட்டு வேறொரு பார்சல் லாரியில் பத்திரமாக ஏற்றி அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A lorry suddenly caught fire on the road near Attur salem


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->