போதை மறுவாழ்வு மையத்திற்கு சென்றவர் மர்ம மரணம்.. காவல்துறை தீவிர விசாராணை..! - Seithipunal
Seithipunal


போதை மறுவாழ்வு மையத்தில் சேர்கப்பட்ட நபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ராயபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவருக்கு மதுபழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. அதிலிருந்து விடுபட சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவதன்று, ராஜ் மது அருந்தியிருந்த நிலையில், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

இதனை அடுத்து, மனைவி கலா மற்றும் குடும்பத்தினர் இணைந்து அங்குள்ள போதை மறுவாழ்வு தகவல் தெரிவிக்கவே அவர்கள் நள்ளிரவில் அவரை அழைத்து சென்றனர். இந்நிலையில், அதிகாலை 2 மணியளவில்  அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்த போது, அவரின் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A maan death in Chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->