கன்னியாகுமரி.! விஷம் குடித்து வாலிபர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கன்னியாகுமாரி மாவட்டம் தலைக்குளம் கீழவிளை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ்(35). இவருடைய மனைவி வாணி. சுபாஷ் கடந்த சில நாட்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது அருந்தி வந்துள்ளார். 

இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் சுபாஷ் குடித்து வந்ததால், இதனை அவரது மனைவி வாணி மற்றும் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

இதனால் மனம் உடைந்த சுபாஷ் சம்பவத்தன்று விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்து உள்ளார். இதைப்பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக சுபாஷ் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி வாணி அளித்த புகாரின் அடிப்படையில், இரணியல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A person commits suicide by drinking poison in kanniyakumari


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->