சேலம்.! பாய் தடுக்கி கீழே விழுந்த நபர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் பாய் தடுக்கி கீழே விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள கன்னங்குறிச்சி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கொத்தனார் வெங்கடேசன்(55). இவருடைய மனைவி கருப்பாயி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

நேற்று இரவு வெங்கடேசன் வீட்டில் பாய் போட்டு, அதில் படுத்திருந்தார். அப்பொழுது திடீரென மின்சாரம் தடைபட்டதால், எழுந்து வெளியே வர முயன்ற போது எதிர்பாராத விதமாக பாய் தடுக்கி கீழே விழுந்துள்ளார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் வீட்டிலிருந்தவர்கள் மணிகண்டனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மணிகண்டன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A person who fell down due to the mat was killed in salem


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->