மது போதையில் அதி வேக பயணம்.. சரக்கு வாகனம் மீது மோதிய இரு சக்கர வாகனம்... இளைஞர் பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த இளைஞர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குருசாமி என்பவர் சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது,  மதுரை – வாடிப்பட்டி நான்கு வழி சாலையில் கடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திண்டுக்கலில் இருந்து மதுரை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அருண் என்ற இளைஞர் சரக்கு வாகனத்தின் பின் பக்கம் மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் மது அருந்தி வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Accident Near Madurai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->