அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன்- மனைவி பலி..! - Seithipunal
Seithipunal


மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் சக்தி. இவரும் இவரது மனைவி சுகன்யா விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள எதப்பட்டு கிராமத்துக்கு மருந்து வாங்க சென்றனர். மருந்து வாங்கிவிட்டு ஊருக்கு தங்கள் இரு சக்கர வாகனம் மூலம் திரும்ப வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Accident Near Thiruvannamalai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->