தாமரை மலரும், தமிழ்நாடும் வளரும் - பிரச்சாரத்தில் பட்டையை கிளப்பிய நமீதா.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் காட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், வடசென்னை தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில், வடசென்னை பா.ஜ.க. வேட்பாளர் பால்கனகராஜை ஆதரித்து நடிகை நமிதா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- "மீனவர்களுக்காக ரூ.39 ஆயிரம் கோடியை மத்திய அரசு கொடுத்துள்ளது. 

எல்லோருக்கும் வீடுகள், பாத்ரூம் வசதி கட்டி கொடுத்திருக்கிறார்கள். நம் வேட்பாளர் பால்கனகராஜ் நன்றாக படித்தவர், சட்டம் தெரிந்தவர், வார்டு கவுன்சிலர் சங்கத்தில் 4 முறை தலைவராக இருந்தவர், ஏழை மக்களுக்காக உதவி செய்தவர். 

நீங்கள் தைரியமாக நம்பி பால் கனகராஜிற்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். உங்களுக்காக 24 மணி நேரமும் உழைப்பதற்காக தயாராக இருப்பார். தாமரை மலரும், தமிழ்நாடும் வளரும், ஜெய்ஹிந்த் என்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor namitha election campaighn in north chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->