டாஸ்மாக் ஊழல், சட்டம், ஒழுங்கு சீரழிவை திசை திருப்பவே தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் - எடப்பாடி பழனிசாமி பேட்டி! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் திமுக ஆட்சி சட்டம், ஒழுங்கை முற்றிலும் சீரழித்துள்ளது. ஊழல் ஆட்சி, அரசு நிர்வாகம் உடைந்துள்ளது.  

தற்போதைய பட்ஜெட், வாக்குகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டது. அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்தவிதமான செயல்பாடுகளாக மாறாது. சட்டமன்ற தேர்தல் வெறும் 10 மாதங்களில் நடைபெற உள்ளதால், இந்த அறிவிப்புகளை நிறைவேற்றுவது செயல்படுத்த முடியாத ஒன்றாகும்.  

சட்டம், ஒழுங்கு சீரழிவை மறைப்பதற்காகவே, பிற மாநில தலைவர்களை அழைத்து தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதலமைச்சர் பேசியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அவருடைய கருத்துகளை முதலில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்க வேண்டும்.  

பாராளுமன்ற வளாகத்தில் திமுக நடத்திய போராட்டத்தில், அவர்களுடைய கூட்டணி கட்சியான காங்கிரஸ் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளை மறைக்கவே திமுக கூட்டணியின் இந்த நடவடிக்கைகள் நடைபெறுகின்றன" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Edappadi Palanisami DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->