தீபாவளி : ரயில் நிலையம், ரயில்களில் தீவிர பாதுகாப்பு! - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் திருட்டு, அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் 1,250 ரயில்வே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ரயில்வே காவல் துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, 7 டிஎஸ்பி-க்கள், 25 ஆய்வாளர்கள், 95 உதவி ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளின் உடமைகள் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதிக்கப்படுகின்றன. பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக பெண் காவலர்கள் சீருடையில் மட்டுமின்றி சாதாரண உடையில் மகளிர் பெட்டிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை, சேலம், மதுரை, திருச்சி, மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் மோப்ப நாய் படை உதவியுடன் தீவிர சோதனை நடைபெறுகிறது.

சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு நடைபெறுவதுடன், சந்தேக நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் தீவிரமாக செயல்படுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ahead of Diwali strict security in railway stations and trains: steps taken to prevent theft and accidents


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->