மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்திருக்கேன் - அதிர வைத்த அண்ணாமலை.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் காட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் S.G.M.ரமேஷை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது அவர் பேசியதாவது:- "நாகை மாவட்டம் 1947ஆம் ஆண்டுக்கு பிறகு கவனிக்கப்படாமல் உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கவுன்சிலரால் கூட ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரை எம்பியாக்கி வைத்துள்ளீர்கள். பாஜக வேட்பாளரை எம்பியாக்கினால் நமக்கு தேவையானதை கேட்கலாம்.

 

திமுகவினர் சமூக நீதி, சம நீதி என்று கூறி வருகின்றனர். ஆனால், அவர்களின் குடும்பத்தை வளர்ப்பது சமூக நீதி இல்லை. அவர்களின் பிள்ளைகளை எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக ஆக்குவது சமூக நீதி இல்லை. அவங்க சொந்தக்காரர்களை அமைச்சராக்குவது சமூக நீதி, சமநீதி இல்லை. அது வெறும் வாய்ப்பேச்சு.

சேகர் பாபு மாதிரி பெரிய பெரிய ரவுடியெல்லாம் பார்த்துட்டுதான் வந்திருக்கேன். நான் எனக்காக வரவில்லை; மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்திருக்கேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

annamalai speech in nagaptinam election campaighn


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->