பீதியை கிளப்பும் டெங்கு காய்ச்சல்!! பூந்தமல்லியில் மேலும் ஒரு சிறுவன் பலி!! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த மதுரவாயல் பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த அய்யனார் சௌமியா தம்பதியினரின் நான்கு வயது மகன் ரக்ஷன் கடந்த 6ம் தேதி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 10ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சாலைகளில் தேங்கிய கழிவு நீரை முறையாக அகற்ற கோரி பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியமே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். இந்நிலையில் அதே பூந்தமல்லி பகுதியில் டெங்கு காய்ச்சலால் மேலும் ஒரு சிறுவன் உயிர் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த பூந்தமல்லியை சேர்ந்த சிறுவன் சக்தி சரவணன் என்பவர் இன்று உயிரிழந்துள்ளார். கடந்த செப்டம்பர் 8ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுவன் சக்தி சரவணனுக்கு ரத்த அணுக்கள் குறைந்ததால் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பூந்தமல்லி பகுதியில் அடுத்தடுத்து டெங்குவிற்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Another boy dies due to dengue in Chennai poonamalli


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->