ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு பதவி! பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக ஆனந்தன் தேர்வு! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஐந்தாம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை வழக்கில், தற்போது வரை பதினாறுக்கும் மேற்பட்டோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் இந்த வழக்கு பல்வேறு கோணங்களில் நீண்டு கொண்டே செல்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய ஒருங்கினைப்பாளர்கள் Dr. அசோக்சித்தார்த், கோபிநாத் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், "பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் பேகன்ஜி மாயாவதி அவர்களின் விரிவான பரிசீலனை மற்றும் ஆலோசனையின் முடிவில், தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக திருமதி.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்கள் நியமித்துள்ளார்.

மாநில தலைவராக திரு. P.ஆனந்தன் BA, BL., DLL (USA) அவர்களையும், மாநில துணை தலைவராக T. இளமான் சேகர் மற்றும் மாநில பொருளாளராக திரு கமலவேல்செல்வன் அவர்களையும் நியமித்துள்ளார். மீதமுள்ள தமிழ்நாடு மாநில கமிட்டி நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Armstrong wife posting in BSP TN


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->