ஆம்ஸ்ட்ராங் கொலை : இயக்குனர் நெல்சன் மனைவி கொடுத்த ரூ.75 லட்சம்.....திடுக்கிடும் தகவல்!
Armstrongs murder Director Nelson wife gave Rs75 lakh shocking information
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜீலை மாதம் படுகொலை செய்யப்பட்டார். மேலும் இந்த கொலை வழக்கில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன், குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளார். இதன் பின்னணியில் மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், மேலும் வெளிநாடு தப்பி செல்வதற்கு முன்பு இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷா தொடர்ந்து அவருடன் செல்போனில் பேசியதாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல் வெளியாகியது.
இந்நிலையில், நெல்சன் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.75 லட்சம் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனின் வங்கி கணக்கிற்கு சென்றிருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து மோனிஷாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில், நண்பர் என்ற முறையில் பணம் அனுப்பியதாக மோனிஷா பதில் கூறியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, மோனிஷா அளித்த தகவல்கள் உண்மைதானா என்ற கோணத்திலும்,மோனிஷா கொடுத்த ரூ. 75 லட்சம், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடக்கி விட்டுள்ளனர்.
English Summary
Armstrongs murder Director Nelson wife gave Rs75 lakh shocking information