4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! போக்சோவில் ஆட்டோ ஓட்டுநர் கைது - Seithipunal
Seithipunal


சென்னையில் நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

சென்னை புளியந்தோப்பு பட்டாளம் பகுதியை சேர்ந்தவர் 4 வயது சிறுமி. இவரது தாய் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த புகார் மனுவில், தனது 4 வயது மகளை கடந்த ஒரு வருடமாக சூளை தட்டாங்குளம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வெற்றிவேல்(52) என்பவர் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்தார். அப்பொழுது வெற்றிவேல், வீட்டில் இருந்து லிப்டில் தனது 4 வயது மகளை அழைத்துச் சென்றபோது பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 

இதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சிறுமிக்கு வெற்றிவேல் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வெற்றிவேலை கைது செய்தனர். பின்பு போலீசார் வெற்றிவேலை, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Auto driver arrested for sexually harassing 4 year old girl in chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->