பைக் மீது ஆட்டோ மோதி விபத்து - வாலிபர் பலி - Seithipunal
Seithipunal


ராமநாதபுரத்தில் பைக் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கன்னிசேரி பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மகன் மதிவாணன் (27). இவர் கீழக்கன்னிசேரியிலிருந்து பைக்கில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று மதிவாணன் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த மதிவாணனை மீட்டு சிகிச்சைக்காக முதுகுளத்தூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்ட மதிவாணன், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே படித்தவமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த முதுகுளத்தூர் போலீசார், ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bike auto accident in ramanadhapuram


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->