பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு! முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய பாஜக எம்எல்ஏ! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி அறிவித்த PM விஸ்வகர்மா யோஜனா திட்டம்  தமிழ்நாட்டில் அமல்படுத்த  வேண்டும் என்று, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடித்தம் எழுதியுள்ளார்.

அவரின் அந்த கடிதத்தில், பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் மேம்படுத்துவதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை திறன்களை மேம்படுத்துவதற்கும், 18 வகையான பாரம்பரிய தொழில்களுக்காக "PM விஸ்வகர்மா திட்டம்" என்ற புதிய திட்டத்தை 2023 செப்டம்பர் 17 ம் தேதி மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் அறிவித்தார்.

இந்த திட்டம் இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு பலனளிக்கும் திட்டமாக கொண்டுவரப்பட்டது.
நாட்டில் இருக்கும் பிற

மாநிலங்கள் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் இத்திட்டம் தமிழ்நாட்டில் இதுவரை தமிழக அரசு அமல்படுத்ததால் இலட்சக்கணக்கான பாரம்பரிய கைவினை தொழிலார்கள் இத்திட்டத்தின் பலனை பெறமுடியாமல் தவிக்கின்றார்கள் அதனால் இத்திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MLA Vanathi Letter to CM Stalin


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->