திருநெல்வேலியில் பரபரப்பு - பாமக நிர்வாகி மீது வெடிகுண்டு வீச்சு.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி கேடிசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா. பாமக நிர்வாகியாக உள்ள இவர் தனது விவசாய நிலத்தில் பணிகளை மேற்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்மக் கும்பல் இவர் மீது பெட்ரோல் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் அங்கிருந்து தப்பித்துச் சென்ற செல்லப்பா, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கை கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறிய அளவு காயம் ஏற்பட்ட நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் நிலத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. பாமக நிர்வாகி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bomb attack on pmk excuetive in tirunelveli


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->