ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருப்பம்! ரவுடி அப்பு கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!
BSP Armstrong hacked to death case Rowdy Appu Statement
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வெடிகுண்டு வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள ரவுடி அப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீசார், கிட்டத்தட்ட கொலையாளிகளை நெருங்கி விட்டனர் என்று சொல்லப்படுகிறது.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்த அஸ்வத்தாமன் மற்றும் அவரின் தந்தை ரவுடி நாகேந்திரன் தான் இந்த கொலைக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய ரௌடியான புதூர் அப்புவை டெல்லி வைத்து போலீசார் கைது செய்து இருந்தனர்.
இது குறித்து வெளியான முதல் கட்ட தகவலின் படி ரவுடி அப்பு தான் இந்த கொலைக்கு வெடி குண்டு சப்ளை செய்ததாக தெரியவந்தது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக நாட்டு வெடிகுண்டு வாங்கியதாக தற்போது கைது செய்யப்பட்டுள்ள 28 வது நபரான ரவுடி புதூர் அப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சம்போ செந்தில் கூட்டாளிகள் 2021 ஆம் ஆண்டு சிறையில் இருந்த போது, செல்போன் வழியாக பேசியதாகவும் ரவுடி அப்பு தகவல் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்போ செந்தில் உடன் நேரடி தொடர்பு இல்லை என்றும், சம்போ செந்தில் கூறியதாக அவரது கூட்டாளிகள் தெரிவித்ததால், நாட்டு வெடிகுண்டு கொடுத்ததாக அப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
BSP Armstrong hacked to death case Rowdy Appu Statement