தொழில் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டி முகாம்..சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


2025-ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு,தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்த வழிகாட்டி ஆலோசனை முகாம்வருகின்ற 06.04.2025 அன்று காலை 09.00 மணியளவில் சிவகங்கை, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் (Auditorium ) நடைபெறவுள்ளது. 

இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித்,வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:சிவகங்கை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் “என் கல்லூரி கனவு” எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டத்தின் கீழ் 2025-ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்த வழிகாட்டி ஆலோசனை முகாம், தன்னார்வ இயக்கத்தின் துணையுடன் வருகின்ற 06.04.2025 அன்று காலை 09.00 மணியளவில் சிவகங்கை, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் (Auditorium ) நடைபெறவுள்ளது. 
எனவே, மாணாக்கர்கள் இவ்வழிகாட்டி ஆலோசனை முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Career and Employment Guidance Camp Sivaganga District Collector


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->