#செங்கல்பட்டு || அரசு மருத்துவமனையின் 3வது மாடியில் நோயாளி தற்கொலை முயற்சி.! வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


கூடுவாஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்த இளைஞரை, அந்தப்பகுதி மக்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்திருந்தனர்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அந்த இளைஞர் திடீரென மூன்று மாடிகள் கொண்ட அந்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாடியில் ஏறி குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார்.

இதனை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு இளைஞரை மீட்டனர்.

போலீசாரின் விசாரணையில் தற்கொலைக்கு முயற்சித்த இளைஞரின் பெயர் சந்திரபாபு என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

அரசு மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள ஸ்லாபில் தொங்கியபடி உயிருக்குப் போராடிய அந்த இளைஞரின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி கொண்டிருக்கிறது.

வீடியோ நன்றி : NEWSTN 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CHENGALPATTU YOUNG MAN attempt suicide video


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->