#சென்னை || ராயபுரம் - காதல் பதிவு திருமணம் - இரண்டே நாளில் இளம்பெண் மர்மமரணம்.!  - Seithipunal
Seithipunal


சென்னை ஆவடி பகுதியில் திருமணம் முடிந்து இரண்டு நாளில் புதுமணப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி முத்துக்குமரன் நகரை சேர்ந்த பட்டதாரியான பட்டதாரி பெண்ணான அனிதா (26 வயது) காட்டுப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்த்து வந்த ஆவடி கோவர்த்தனகிரி அன்புநகர்  பகுதியை சேர்ந்த உதயா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த புதன்கிழமை ராயபுரத்தில் பதிவு திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆன நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலை அனிதா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரின் உடலை கைப்பற்றிய போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அனிதாவின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai aavadi young woman mystery dead


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->