பெண்ணிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி! - Seithipunal
Seithipunal


வழக்கு குறுக்கு விசாரணையின் போது, பெண் மனுதாரரிடம், பண்பற்ற முறையில் வழக்கறிஞர் கேள்வி எழுப்பிய விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சொத்து பாகப்பிரிவினை வழக்கின் குறுக்கு விசாரணையின் போது, பெண் மனுதாரரிடம் குறுக்கு விசாரணை செய்த வழக்கறிஞர் பண்பற்ற முறையில் கேள்வி எழுப்பிய விவகாரம் சர்ச்சையை எழுப்பியது.

இதுகுறித்த மேல்முறையீட்டு மனு தீர்ப்பில் இன்று, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும் நீதிப்பத்தி தெரிவிக்கையில், "நீதிமன்றத்தில் மனுதாரர் அவமதிக்கப்பட்டதால் மன்னிப்பு கோருகிறோம். மனுதாரர்களை அவமதிக்கவோ, காயப்படுத்தவோ குறுக்கு விசாரணை இல்லை.

தங்களது உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடும் பெண்களின் நடத்தையை படுகொலை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கக்கூடாது" என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai HC Justice Bharatha Chakravarthy Apology


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->