ஏப்ரல் 21 தான் லாஸ்ட்.. மொத்தக் கொடிக் கம்பத்தையும் காலி பண்ணிடனும் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!   - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள ராயபுரம் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த தி.மு.க. கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டை அகற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் "ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

தனி நீதிபதி பிறப்பித்த அந்த உத்தரவை, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்" என்று வாதிட்டார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்த காலக்கெடு ஏப்ரல் 21-ந்தேதி முடிவடைகிறது. அதற்குள் தமிழகம் முழுவதும் உள்ள பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்" என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai high court order remove flag poles


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->