சென்னையில் பெண் போலீசுக்கு பிளேடால் வெட்டு! மது போதையில் இளைஞர் அராஜகம்! - Seithipunal
Seithipunal


சென்னை, ராயப்பேட்டை விஎம் தெரு பகுதியில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயிலில் கடந்த பத்து நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. 

நேற்று இந்த முண்டக கன்னியம்மன் கோவில் திருவிழா நடைபெற்ற போது, சுமார் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், மது போதைகள் அராஜகத்தில்  ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் பல்வேறு செயல்களை இந்த இளைஞர்கள் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. 

அப்போது, கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் கௌசல்யா, அந்த போதை இளைஞர்களை கண்டித்து சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.

இதனை ஏற்றுக் கொள்ளாத அந்த மது போதை இளைஞர்களில் ஒரு இளைஞர், ஆத்திரத்தில் பெண் காவலர் கௌசல்யாவை பிளேடால் வெட்டியுள்ளார். 

இதனை சற்றும் எஎதிர்பார்க்கிறாத போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர். தொடர்ந்து படுகாயம் அடைந்த காவலர் கௌசல்யாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

மேலும், பெண் காவலர் கௌசல்யா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஸ்ரீதர், அசோக், சசி, கிஷோர் ஆகிய நான்கு இளைஞர்களை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Rayapettai Lady Police Attacked


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->