சென்னை உயர்நீதிமன்றத்தில் 3-4 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் "சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளில் 3 முதல் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிடும் போது மட்டும் முக கவசத்தை நீக்கிக் கொள்ளலாம். மற்ற சமயங்களில் நீதிமன்ற வளாகங்களில் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்ற விசாரணை  நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏன் கூட்டம் கூட்டமாக நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் வருகிறார்கள்?

நீதிமன்றங்களுக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்படுகிறது. எனவே வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் நேரில் ஆஜராகி வாதிடுவதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று 500-ஐ தாண்டியுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ChennaiHC 3to4 judges are confirmed Corona virus positive


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->