சென்னை மெட்ரோ ரெயிலில் கஞ்சா! தட்டி தூக்கிய போலீஸ்! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மெட்ரோ ரெயிலில் கஞ்சா பயன்படுத்தியதாக பதிவிட்டிருந்த நிலையில், அந்த இளைஞரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த  2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல், கஞ்சாவினை ஒழிக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசும், தமிழக காவல்துறையும் மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் கஞ்சா புழக்கமும், கஞ்சா போதையினால் ஏற்படும் குற்றச்சம்பவங்களும் குறையவில்லை என்று அரசியல் காட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

கஞ்சா குறித்த ஒரு வழக்கில், காவல்துறைக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்திய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, கஞ்சாவை கட்டுப்படுத்த தமிழக காவல்துறைக்கு கடுமையான கண்டனங்களையும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில், சென்னை மெட்ரோ ரயிலில் இளைஞர் ஒருவர் கஞ்சாவை பயன்படுத்தும் புகைப்படங்கள் இரண்டை வெளியிட்டு, "பரபரப்பாக இயங்கும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர்.

தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் போதை ஆசாமிகள்.

கஞ்சா 2.0, 3.0, 4.0 என வெற்று விளம்பரம் மட்டுமே செய்யும் ஸ்டாலின், இனிமேலாவது சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்துவாரா? என்ற ஜெயக்குமார் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயிலில் கஞ்சா பயன்படுத்தியதாக உணவு டெலிவரி ஊழியர் புவனேஷ்  என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவருக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chenneai Metro rail Young man arrest Ganja


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->