சிறுமியை கொடுமைப்படுத்திய வழக்கு: திமுக எம்.எல்.ஏவின் மகன், மருமகள் சிறை அடைப்பு!  - Seithipunal
Seithipunal


சென்னை, பல்லாவரம் தொகுதி தி.மு.க எம்எல் ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் அவர்களது வீட்டில் பணியாற்றி வந்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்தது. 

அதன் அடிப்படையில் போலீசார் மதிவாணன்-மெரினா தம்பதி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதனால் எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் இருவரும் தலைமறைவாகினர். இதனைதொடர்ந்து போலீசார் 3 தனி படைகள் அமைத்து அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில் நேற்று ஆந்திராவில் தலைமறைவாக இருந்த மதிவாணன்-மெரினா இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

பின்னர் இருவரையும் போலீசார் சென்னை அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது நீதிபதி வருகின்ற 9 ஆம் தேதி வரை அவர்களுக்கு நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டதால் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Child abuse case DMK MLA son daughter in law jailed


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->