இருசக்கர வாகனத்தின் மீது மோதிய தண்ணீர் லாரி.. உடல் நசுங்கி பலியான மாணவன்..! - Seithipunal
Seithipunal


தண்ணீர் லாரி மோதி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மயிலாப்பூர் சுந்தர கிராமணி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை அவர் தனது இருசக்கர வாகனத்தில் அடையாறு போர்ட் கிளப் 1- வது அவென்யூவில் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய லாரி ஒட்டுநரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

College Student Death in Accident


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->