தர்மபுரி: தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு.!
College student drowned in thenpennai river in dharmapuri
தர்மபுரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகன் யோகேந்திரன் (18) சென்னை நந்தனம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் யோகேந்திரனும், அதே கல்லூரியில் படித்து வரும் யோகேந்திரனின் நண்பரான தர்மபுரி மாவட்டம் நவலை பகுதியை சேர்ந்த அர்னால்டும் (18) நேற்று நவலை பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்பொழுது பெரமாண்டப்பட்டியில் உள்ள தென்பெண்ணை ஆற்றுக்கு சில நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளனர். அப்பொழுது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த யோகேந்திரன் எதிர்பாராத விதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் யோகேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
College student drowned in thenpennai river in dharmapuri