தேர்வு கட்டணத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் - மதுரையில் பரபரப்பு.!
college student sucide in madurai for no pay semaster exam fees
மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் பூலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் இளமாறன். இவர் புது விளாங்குடி கணபதி நகர் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியபடி மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இதற்கிடையே பருவத் தேர்வுக்கான பணம் கட்ட முடியாத சூழலில் இளமாறன் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ள நிலையில், இன்று மதியம் திடீரென வீட்டில் ஆள் இல்லாத போது தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு அளித்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் கல்லூரி செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்த முடியாத நிலையில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
college student sucide in madurai for no pay semaster exam fees