திருமண ஆசை காட்டி சிறுமி பாலியல் வன்கொடுமை; வாலிபர் கைது! - Seithipunal
Seithipunal


திருமண ஆசை காட்டி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து  போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த வாலிபர் அரவிந்த் . 26 வயதான அந்த வாலிபருக்கும் அதேபகுதியை சேர்ந்த 16 வயதுடைய ஒரு சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.குடும்ப ஏழ்மையின் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அந்த சிறுமி அங்குள்ள வலை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த  சிறுமியின் வீட்டிற்கு புகுந்த முருகன் சிறுமியிடம் நைசாக பேசி அந்த பகுதியில் உள்ள நூலக கட்டிடம் அருகே அழைத்து சென்று திருமண ஆசைகாட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து வீட்டுக்கு சென்ற சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறியதையடுத்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான அரவிந்தை தேடி வந்தநிலையில்   மைசூரில் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அரவிந்த் நாகர்கோவிலில் உள்ள போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். அரவிந்த் மீது ஏற்கனவே 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Girl sexually assaulted on pretext of marriage Young man arrested


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->