4 மாவட்டங்களில் வருகின்ற 17ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்!  - Seithipunal
Seithipunal


சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வருகின்ற 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் கடந்த 3,4 ஆகிய தேதிகளில் கனமழை பெய்தது. 

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரண உதவித் தொகையாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

இதற்கிடையே சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் மக்களுக்கு நிவாரண உதவி தொகை வழங்கப்படும் எனவும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் மற்றும் திருப்போரூர் வட்டத்தில் 3 கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து நிவாரண உதவி தொகை வழங்குவதற்கு டோக்கன் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற 
4 மாவட்டங்களில் வருகின்ற 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெள்ள நிவாரணத் தொகைக்கான டோக்கன் வழங்கப்படுவதற்காக ரேஷன் கடைகள் இயங்கும் என உணவுப் பொருள் வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coming17th 4 districts Ration shops open


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->