தொடர் கனமழை எதிரொலி!...மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.40 அடியாக உயர்வு! - Seithipunal
Seithipunal


காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்றவாறு அதிகரித்தோ குறைத்தோ திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில், காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக கடந்த வாரம் டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

இதற்கிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் விடிய விடிய பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

தொடர் நீர்வரத்து அதிகரிப்பால், அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.இந்த நிலையில்  இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.40 அடியாக உயர்ந்து காணப்பட்டது.

மேலும், அணைக்கு 29 ஆயிரத்து 307 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில், அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 7500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல், அணையில் 66.66 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Continual heavy rain reverberates mettur dam water level rises to 101 and 40 feet


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->