நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை!...17,596 கன அடியை எட்டியது மேட்டூர் அணை! - Seithipunal
Seithipunal


காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்து. தொடர்ந்து இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்றவாறு அதிகரித்தோ குறைத்தோ திறந்து விடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், காவிரி டெல்டா பாசன பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக கடந்த வாரம் டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், பின்னர் 12 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.

இதற்கிடையே, மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று காலை நேர நிலவரப்படி  89.26 அடியாக இருந்த நிலையில், அணைக்கு வினாடிக்கு 6,445 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,445 கன அடியிலிருந்து 17,596 கன அடியாக அதிகரித்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7,000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும், மேலும், மேட்டூர் அணையில் நீர்மட்டம் 89.92 அடியாகவும், நீர் இருப்பு 52.55 டி.எம்.சி ஆகவும் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Continuous rain in the catchment areas mettur dam reaches 17596 cubic feet


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->