மதுரையில் பயங்கரம் - பூட்டிய வீட்டில் வெடித்த நாட்டு வெடிகுண்டு.!! - Seithipunal
Seithipunal


மதுரையில் பயங்கரம் - பூட்டிய வீட்டில் வெடித்த நாட்டு வெடிகுண்டு.!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜீத்குமார். இவர் மருத்துவ பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அஜீத்குமாரின் பூட்டிய வீட்டில் இன்று காலை பெரும் வெடி சத்தம் கேட்டுள்ளது.

இதைக்கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துவிட்டு பின்னர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்தத் தகவலின் படி போலீஸார் விரைந்து வந்து வெடிசத்தம் வீட்டில் ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளது. இதனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடி விபத்தில் வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

இருப்பினும், அந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வெடி சம்பவம் குறித்து கரிமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

country bomb explosion in locked house madurai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->