கன்னியாகுமரி || கடன் தொல்லையால் கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


கடன் தொல்லையால் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் ஜாண்ஐசக். இவருக்கு திருமணமாகி சந்தியா என்ற மனைவி இருக்கிறார். ஜாண்ஐசக் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால், அக்கம்பக்கதில் கடன் வாங்கியுள்ளனர். வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவித்து  வந்தனர்.

இந்நிலையில், சந்தியாவின் அக்கா அவருக்கு தொலைப்பேசியில் அழைப்பு விடுத்தார். நீண்ட நேரமாகியும் அவர் போனை எடுக்காததால் அவரின் வீட்டிற்கு சென்றார். வீடு பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியே உள்ளே பார்த்த போது சந்தியா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சிய்யடைந்தார். இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

விரைந்து வந்த காவல்துறையினர்  கதவை உடைத்து உள்ளே சென்ற பார்த்த போது ஜாண்ஐசக் விஷம் குடித்து சடலமாக கிடந்தார். சந்தியா தூக்கில் சடலாமாக கிடந்தார். அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Couple Committed Suicide In Kanniyakumari


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->