#BREAKING : கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் சென்னை அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய விஜயகுமார் கோவை சரக டிஐஜி-யாக மாற்றப்பட்டார். அதற்கு முன் காஞ்சிபுரம் நாகப்பட்டினம் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் எஸ்.பி-யாக பணியாற்றியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 7ம் தேதி கோவை டிஐஜி-யாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் விஜயகுமார் இன்று தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Covai DIG Vijayakumar suicide


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->