நத்தம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து! 2 பேர் பலி! - Seithipunal
Seithipunal


நத்தம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மலையடிவார கிராமமான ஆவிச்சிபட்டியில் அனுமதியுடன் வெடி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

சிவகாசியை சேர்ந்த பணியாளர்கள் இருவர் நேற்று இரவு வெடி தாயரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வெடிவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவ இடத்திலேயே  2 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நத்தம் போலீஸார் அதிகாலையில் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

இறந்தவர்களின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், இறந்தவர்கள் சிவாகாசியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் குறித்த விபரம் தெரியவில்லை. பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வம் தலைமறைவாகியுள்ளார். நத்தம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cracker factory explosion near Natham 2 people died


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->