#BREAKING : கட்டிட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம்-தமிழக முதல்வர்.! - Seithipunal
Seithipunal


கடலூரில் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வண்டிக்குப்பம் பகுதியில் சமத்துவபுரம் அருகே இலங்கை அகதிகளுக்காக கட்டப்பட்ட பழைய அரசு கட்டிடத்தின் அருகில் சிறுவர்கள் அமர்ந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனை அடுத்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கிய ஒருவரை உயிருடன் மீட்டது தீயணைப்பு துறை.

இந்த நிலையில், கடலூரில் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்த சிறுவன் புவனேஷ்க்கு ரூபாய்.50 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுவன் புவனேஷ்க்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cuddalore old building clash 2 lakh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->