முடியவே முடியாது! நேரில் ஆஜரான செந்தில்பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்!
DMK Minister Senthilbalaji case Chennai Court
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதை தொடர்ந்து, நேற்று அவர் அமைச்சராக மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.
அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த வழக்கு மற்றும் அமலாக்கத் துறையின் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று அமலாக்கத்துறை வழக்கில் சாட்சி விசாரணைக்காக அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அப்போது, வழக்கு விசாரணையை வரும் அக்,14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க செந்தில்பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி கார்த்திகேயன், வரும் அக்,4 ஆம் தேதி ஆஜராக செந்தில்பாலாஜிக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளி்ட்டோருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அடுத்த விசாரணைக்குள் அளிக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடர்ந்த வழக்கை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய கோரி மனு மீதான விசாரணையில் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
English Summary
DMK Minister Senthilbalaji case Chennai Court