செந்தில் பாலாஜி வழக்கில் அதிரடி திருப்பம் - உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளி்ட்டோருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அடுத்த விசாரணைக்குள் அளிக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போக்குவரத்து துறையில்  வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடர்ந்த வழக்கை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய கோரி மனு மீதான விசாரணையில் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மேலும், செந்தில் பாலாஜி வழக்குடன் 23 வழக்குகளை விசாரித்து வருவதாக நீதிபதி அறிக்கை அளித்துள்ளார் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister SenthilBalaji case Supreme court Order


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->