#சென்னை || 20 இளம்பெண்களை காதலித்து ஏமாற்றிய நாடக காதலன் முகமது சையது கைது.! - Seithipunal
Seithipunal


காதலிப்பதாக கூறி 20க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றியதாக, நாடக காதலன் முகமது சையது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது சையது. இவர் பாலியல் பலாத்கார வழக்கில் வேப்பேரி காவல் நிலைய போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

வேப்பேரி காவல் நிலையத்தில் 3 பெண்கள் ஒரே நேரத்தில் முகமது சையது மீது புகார் ஒன்றை தெரிவித்தனர். அதில், காதலிப்பதாக கூறி தங்கள் மூன்று பேரையும் முகமது சையது ஏமாற்றியதாக அந்தப் பெண்கள் புகாரில் தெரிவித்து உள்ளனர்.

புகார் தெரிவித்த மூன்று பேரும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்று முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. அதேபோல் முகமது சையதும்  சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது.

மேலும், முகமது சையதை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை செய்ததில், முகமது சையது கடந்த சில வருடங்களில் 20க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி காதல் வலையில் விழுத்தி ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.

மேலும், முகமது சையது இதனை தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகார் அளிக்க வந்த மூன்று பெண்களும் ஒரே துறையை சேர்ந்தவர்கள் என்பதால், மூன்று பேரும் ஒரு கட்டத்தில் ஒன்று சேர்ந்து பேச நேர்ந்தபோது, இந்த மூவரும் ஒரே நபரை காதலித்து ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்தே முகமது முகமது சைய தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

drama love issue chennai muhammad


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->