மகன் என்று கூட பார்க்காமல்.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற தாய்..! நடந்தது என்ன?
Thiruvallur mother doused with petrol fire
மது போதையில் தாயுடன் தகராறு செய்த மகனை, பெட்ரோல் ஊற்றி கொன்ற சம்பவம் திருவள்ளூரில் அரங்கேறி உள்ளது.
திருவள்ளூர் அடுத்த தொடுக்காடு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (27). இவர் புதிய தொழில் தொடங்குவதற்காக தனது தாய் ஜெயந்தியிடம் மது போதையில் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது.
பின்னர் பணம் கொடுக்க மறுத்த தாயிடம், தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தாய், மகன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை அடுத்து மகனை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த ஜெயந்தியை மப்பேடு காவல்துறையினர் கைது செய்தனர். பெற்ற மகனையே பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Thiruvallur mother doused with petrol fire