நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பு - போலி பத்திரிகையாளர்கள் கைது.!
eight peoples arrested for money fraud in kanniyakumari
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள, புதுக்கடை பகுதியில் ஜஸ்டின் ராஜ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் பத்திரிகை நிருபர்கள் என்றுக் கூறி சிலர், நிதி நிறுவனத்தில் அதிகப்படியான வட்டி வாங்குவதாக புகார் வந்துள்ளது.
இது குறித்து பத்திரிகையில் அவதூறு செய்தி வெளியிடாமல் இருக்க ஒரு லட்ச ரூபாய் தர வேண்டும் எனக் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் ஜஸ்டின் ராஜ் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் அந்த நபர்கள் ஜஸ்டின் ராஜை அச்சுறுத்தி சட்டை பையில் இருந்த ரூ.5 ஆயிரத்தை எடுத்துவிட்டு தப்பித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஜஸ்டின் ராஜ் போலீசில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் குலசேகரத்தை சேர்ந்த ஆன்றனி, கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த சுனில், கருவாவிலை பகுதியை சேர்ந்த லால், ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த செல்வராஜா, கன்னியாகுமரியை சேர்ந்த சுரேஷ் கோபி, திருவட்டார் பகுதியை சேர்ந்த பெல்வின் ஜோஸ், கீழபெருவிளை பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சின்ன முட்டம் பகுதியை சேர்ந்த சகாய போஸ்கோ உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர்.
பின்னர் போலீசார் கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
eight peoples arrested for money fraud in kanniyakumari