மகன் இறந்த துக்கத்தில் தந்தை விபரீத முடிவு: திருமுல்லைவாயலில் சோகம்.! - Seithipunal
Seithipunal


திருமுல்லைவாயலில் மகன் இறந்த துக்கத்தில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் டிரைவர் கண்ணப்பன் (33). இவரது மனைவி மீனா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர்களது மூத்த மகன் ஜஸ்வந்த் (5), இறந்துவிட்டார். இதனால் மனமுடைந்த கண்ணப்பன் சரியாக வேலைக்குச் செல்லாமல், மதுவுக்கு அடிமையாகியுள்ளார்.

இதையடுத்து கணவன்-மனைவி இடையே இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீனா, மற்றொரு மகனை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று கண்ணப்பன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த கண்ணப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Father commits suicide in thirumullaivoyal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->