நாளை கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! - Seithipunal
Seithipunal


புயல் மற்றும் அதி கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே புதுவை, காரைக்காலுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் புயலாக வலுப்பெற்றது.

இந்தப் புயல் நாளை காலை காரைக்கால் மகாபலிபுரம் இடையே கரையை கடக்க கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் அதிக கன மழைக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும் நாளை சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fengal cyclone heavy rain alert Cuddalore puduvai karaikal school college leave


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->