நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்து - லாரி : 5 பேர் பலி; 20 பேர் படுகாயம்.!
five peoples died and 20 peoples injured for accident in thiruthani
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அருகே அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் .

மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர். திருத்தணி சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கம் நடந்து வரும் நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொன்டு வருகின்றனர். அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
five peoples died and 20 peoples injured for accident in thiruthani